states

img

முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை

பாஜக ஆளும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் திரப்  மாவட்டத்தில் உள்ள கோன்சா  தொகுதியில் கடந்த 2009இல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றவர் யெம்சென் மாட்டே. கடந்த 2015இல் காங்  கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், மியான்மர் எல்லை யில் உள்ள ராஹோ என்ற கிராமத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு யெம் சென் சென்றிருந்தார். இதனிடையே அங்கு ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் யெம்சென் மற்றும் அவரது ஆதர வாளர்களை அருகிலிருந்த காட்டுப்பகு திக்கு அழைத்துச் சென்றனர். சில மணி  நேரங்களுக்கு பிறகு யெம்சென் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப் பது தெரியவந்தது.

மியான்மர் எல்லையில் பதற்றம்
யெம்சென் மாட்டே எம்எல்ஏ மற்றும்  மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்  துறையின் உறுப்பினராக பணியாற்றி யுள்ள அனுபவம் உடையவர் என்பதால், திரப் மாவட்டத்திலும், மியான்மர் நாட் டின் எல்லையில் உள்ள இந்திய பகுதி களிலும் பிரபல தலைவராக கருதப்படு கிறார். திடீரென யெம்சென் சுட்டுக்கொல்  லப்பட்டதால் மியான்மர் எல்லைப்பகுதி களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  யெம்சென் மாட்டே வருகிற 2024 சட்ட மன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டி யிட விருப்பம் தெரிவித்திருந்த நிலை யில், நாகா பிரிவினைவாத சேர்ந்த வர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் முதல் கட்ட விசா ரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.